தில்லியில் ஒரேநாளில் 500 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 10,554 ஆக அதிகரிப்பு

தில்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 500 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தில்லியில் ஒரேநாளில் 500 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 10,554 ஆக அதிகரிப்பு

தில்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 500 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தில்லியில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலில்,

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் (மே 18 நள்ளிரவு 12 மணி வரை) புதிதாக 500 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தில்லியில் மொத்த பாதிப்பு 10,554 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5,638 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4,750 பேர் குணமடைந்துள்ளனர். 

தில்லியில் கரோனாவுக்கு பலி எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com