ராஜஸ்தானில் மேலும் 128 பேருக்கு கரோனா; பாதிப்பு 5,757 ஆக உயர்வு!

ராஜஸ்தானில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் மேலும் 128 பேருக்கு கரோனா; பாதிப்பு 5,757 ஆக உயர்வு!

ராஜஸ்தானில் கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தானும்  உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானில் கடந்த 12 மணி நேரத்தில் (இன்று பிற்பகல் 2 மணி வரை) கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேலும் 128 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

இதையடுத்து மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5,757 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 3,232 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 2386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com