ஊழியருக்கு கரோனா; தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடல்

ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டது. 
ஊழியருக்கு கரோனா; தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடல்

ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தில்லி தமிழ்நாடு இல்லம் மூடப்பட்டது. அங்கு சுகாதாரப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மேலும், ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com