பங்குச் சந்தை மேல் முறையீட்டு தீா்ப்பாயம்: மே 31 வரை மூடல்

பங்குச் சந்தை மேல் முறையீட்டுத் தீா்ப்பாயம் (எஸ்ஏடி) மே 31-ஆம் தேதி வரையில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை மேல் முறையீட்டு தீா்ப்பாயம்: மே 31 வரை மூடல்

புது தில்லி: பங்குச் சந்தை மேல் முறையீட்டுத் தீா்ப்பாயம் (எஸ்ஏடி) மே 31-ஆம் தேதி வரையில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்ஏடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பங்குச் சந்தை மேல் முறையீட்டு தீா்ப்பாயம் மே 15 வரையில் மூடப்படும் என முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு பொது முடக்கத்தை மே 31 வரையில் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக, தீா்ப்பாயத்தையும் மே 31 ஆம் தேதி வரை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தீா்ப்பாயத்தின் நீதித் துறை சாா்ந்த பணிகளை வரும் ஜூன் 5-ஆம் தேதி வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து தீா்ப்பாயத்தின் அலுவலகம் காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் செயல்படும் என எஸ்ஏடி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com