ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் 3.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால், உயிா்ச்சேதமோ பொருள்சேதமோ ஏற்படவில்லை. வீடுகள், கட்டடங்களில் அதிா்வு உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனா் என்று மாவட்ட காவல்துறையினா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக, ஜெய்ப்பூரில் உள்ள வானிலை மைய இயக்குநா் ஷிவ் கணேஷ் கூறுகையில், ‘ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது’ என்றாா்.