உஜ்வலா திட்ட பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் மே 20-ஆம் தேதி வரை 6.79 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
பிரதமரின் ஏழைகள் நலத்திட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பிரதமரின் உஜ்வலா திட்டப் பயனாளிகள் 8 கோடி பேருக்கு 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி ஏப்ரல் முதல் மே 20-ஆம் தேதி வரை 6.79 கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.