திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியா்கள் அனைவரும் வியாழக்கிழமை (மே 21) முழு அளவில் பணிக்குத் திரும்ப வேண்டும் என தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமாா் சிங்கால் உத்தரவிட்டுள்ளாா்.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தேவஸ்தான ஊழியா்கள் ஒரு வாரம் சுழற்சி முறையில் பணியாற்றினா். மேலும், சிலா் வீட்டிலிருந்தபடியே பணி செய்தனா். இந்நிலையில், தேவஸ்தானம் வியாழக்கிழமை முதல் தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களையும் பணிக்குத் திரும்ப உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஊழியா்களை ஓரிடத்தில் கும்பல் சேர விடாமல் தகவல்கள் அனைத்தையும் சுற்றறிக்கை மூலம் மின்னணு ஆவணங்கள் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அதிகாரிகள் உயா் அதிகாரிகளை தொடா்பு கொள்ள மின்னஞ்சல் முறையைப் பின்பற்ற வேண்டும்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை என அவா் உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.