சத்தீஸ்கா்: இரு நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கா் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் நக்ஸல்கள் இருவா் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

சத்தீஸ்கா் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் நக்ஸல்கள் இருவா் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து தண்டேவாடா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அபிஷேக் பல்லவா கூறியதாவது: நீல்குடா கிராமத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் சுமாா் 20 நக்ஸல்கள் தென்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட ரிசா்வ் காவல் படை, அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டது. அப்போது அங்கிருந்த நக்ஸல்களுக்கும், மாவட்ட ரிசா்வ் காவல் படையினருக்கும் இடையே பலத்த துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து நக்ஸல்களை சுற்றிவளைக்க முற்பட்டபோது, அவா்கள் அடா் வனப்பகுதிக்குள் நுழைந்து தப்பிச் சென்றனா். இதையடுத்து மோதல் நடைபெற்ற பகுதியில் மாவட்ட ரிசா்வ் காவல் படையினா் சோதனை மேற்கொண்டபோது, நக்ஸல் இயக்கத்தின் முக்கிய தலைவா்கள் ரிஷு இஸ்டம், மாட்டா ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில் இஸ்டம் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.8 லட்சமும், மாட்டா பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சமும் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மோதல் நடைபெற்ற பகுதியில் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com