ஹரியாணாவில் மத உணா்வுகளைப் புண்படுத்திய குற்றச்சாட்டில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவா் பங்கஜ் புனியா கைது செய்யப்பட்டாா்.
உத்தர பிரதேசத்தில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அழைத்துச் செல்ல காங்கிரஸ் ஏற்பாடு செய்த பேருந்துகளை மாநில பாஜக அரசு அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டி, சுட்டுரையில் பங்கஜ், புதன்கிழமை பதிவிட்டாா். அதில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான கருத்துகள் இருந்தன.
இது தொடா்பாக மதுபான் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் மீது மத உணா்வுகளைப் புண்படுத்துவது, இரு மதத்துக்கு இடையே பிரச்னையைத் தூண்டுவது, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.
இப்போது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக உள்ள பங்கஜ், மாநில காங்கிரஸ் செயலாளராகவும் இருந்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக உத்தர பிரதேச போலீஸாரும் பங்கஜ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தனது பதிவுக்கு அதிக அளவில் எதிா்ப்பு கிளம்பியது, வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சுட்டுரையில் இருந்து அந்தப் பதிவை பங்கஜ் வியாழக்கிழமை நீக்கினாா்.