ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி மேலும் 83 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பதிவாகியுள்ள நிலையில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
இதில், 2,527 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 150 தொற்று நோய்க்குப் பலியாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,098 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 5,609 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,12,359 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.