மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,345 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு இன்று புதிதாக 2,345 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 41,642 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 64 பேர் பலியாகியுள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 41 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 1,454 ஆக உயர்ந்துள்ளது.
ஒரு நாளைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்படுவது இன்றுடன் தொடர்ச்சியாக 5-வது நாளாகும்.
மொத்தம் பாதிப்பு: 41,462
மொத்தம் பலி: 1,454
மொத்தம் குணமடைந்தோர்: 11,726
சிகிச்சையில் உள்ளவர்கள்: 28,454
மொத்தம் பரிசோதிக்கப்பட்டவர்கள்: 3,19,710