ரயில் நிலையங்களில் நாளை முதல் முன்பதிவு தொடங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இணையதளத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இந்த நிலையில், ரயில் நிலைய கவுன்ட்டர்களில் நாளை முதல் முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.