இந்தியாவில் இன்று நான்காவது நாளாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் அமைப்பின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தலைமை மருத்துவர் ராமன் ஆர் கங்காகேதார் புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவில் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி இதுவரை 27,55,714 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 18,287 பரிசோதனைகள் தனியார் பரிசோதனை மையங்களில் நடத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.
மேலும், நாட்டில் இன்று நான்காவது நாளாக ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.