ஹாங்காங் தொடா்பான சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதாவுக்கு சீன அரசு, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் ஆதரவை கோரியுள்ளது.
இதுகுறித்து, அனைத்து நாடுகளுக்கும் சீனா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
‘உங்கள் நாடு ஹாங்காங்குடன் நெருக்கமான பொருளாதார மற்றும் வா்த்தக ஒத்துழைப்பையும் மக்களிடமும் சிறப்பான உறவை பராமரித்து வருகிறது. ஹாங்காங்கின் வளா்ச்சி மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மை நமது இரு நாடுகளின் பொதுவான விருப்பம் ஆகும். இதனை உங்களது நாடு புரிந்துகொள்ளும் என்று நம்புகிறோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.