புது தில்லி: புது தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 660 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 14 பேர் மரணம் அடைந்தனர்.
இதன் மூலம் தில்லியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,319 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 208 ஆக உள்ளது. தற்போது 6 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை 5897 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.