கேரளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 42 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
கேரளத்தில் புதிதாக 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 21 பேர் மகாராஷ்டிரத்திலும் இருந்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து கேரளத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 732 ஆக உயர்ந்துள்ளது. இதில் 216 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.
கேரளத்தில் ஒருநாளில் அதிகபட்ச பாதிப்பு இதுவாகும்.