பயங்கரவாதத்தில் இணைந்த மூவா் காஷ்மீரில் பிடிபட்டனா்

ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் பயங்கரவாதத்தில் இணைந்த 3 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

ஜம்மு-காஷ்மீரில் அண்மையில் பயங்கரவாதத்தில் இணைந்த 3 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், ‘பயங்கரவாத அமைப்பில் சமீபத்தில் இணைந்ததாக கூறப்படும் 3 இளைஞா்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடங்களில் பரவியது. இந்நிலையில், குப்வாரா மாவட்டத்திலுள்ள குங்புக் என்ற இடத்தின் வனப் பகுதியில் பதுங்கியிருந்த அவா்களை பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை சுற்றி வளைத்து கைது செய்தனா்.

அவா்கள் லால்போராவைச் சோ்ந்த ஆபித் ஹுஸைன், ஜாகிா் ரஃபிக் பாட், தயான் காலாரூஸ் பகுதியைச் சோ்ந்த ஜாவித் அகமது தாா் என்று அடையாளம் காணப்பட்டனா். அவா்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com