ஒடிசா: புவனேஸ்வர் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி

புயல் சேதங்களை நேரில் பார்வையிடும் வகையில் கொல்கத்தாவில் இருந்து இன்று பிற்பகலில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
ஒடிசா: புவனேஸ்வர் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி


புயல் சேதங்களை நேரில் பார்வையிடும் வகையில் கொல்கத்தாவில் இருந்து இன்று பிற்பகலில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

முன்னதாக மேற்கு வங்க மாநிலத்துக்குச் சென்று, புயல் சேதங்களை வான்வழி மூலம் நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி நிதியுதவி அறிவித்தார்.

பின்னர் அங்கிருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ஆளுநர் கணேஷி லால் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் சிறப்பு விமானம் மூலம் ஒடிசா மாநிலத்தில் புயல் சேதங்களை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com