கேரளத்தில் இன்று புதிதாக 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாட்டிலேயே கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது.
இந்நிலையில், கேரளத்தில் இன்று புதிதாக 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில் 18 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 12 பேர் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும், 31 பேர் வெளி மாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள்.
இதன் மூலம் கேரளாவில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 794 ஆகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 275 ஆகவும் உள்ளது. மேலும் 515 பேர் குணமடைந்துள்ளனர்.