எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 21 வீரர்களுக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கரோனா சிறப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை எல்லைப் பாதுகாப்புப் படையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 286 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 120 பேர் சிகிச்சை பெற்று வருவதாக எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.