தில்லியில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை 231 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி தலைநகர் தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 591 பேருக்கு கரோனா நோய் பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12,910 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 231 ஆக உள்ளது. 12, 319 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.