சிக்கிம் மாநிலத்தில் முதல் நபருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாட்டில், கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,25,101 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 3,720 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் அதிகபட்சமாக 6,654 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் முதல் நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை செயலர் பூட்டியா தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர் தெற்கு சிக்கிமை சேர்ந்தவர்.
இவர் கடந்த 17ஆம் தேதி தலைநகர் தில்லியில் இருந்து கிக்கிம் திரும்பியவர். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் பேருந்தில் பயணித்த அனைவரும் கண்ணடறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.