சீன வங்கிகளுக்கு ரூ.5,400 கோடியை செலுத்துமாறு அனில் அம்பானிக்கு நீதிமன்றம் உத்தரவு

சீனாவில் இயங்கி வரும் வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடியை 21 நாட்களுக்குள் செலுத்துமாறு பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீன வங்கிகளுக்கு ரூ.5,400 கோடியை செலுத்துமாறு அனில் அம்பானிக்கு நீதிமன்றம் உத்தரவு


லண்டன்: சீனாவில் இயங்கி வரும் வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனுக்காக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி ரூ.5,400 கோடியை 21 நாட்களுக்குள் செலுத்துமாறு பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் செயல்பட்டு வரும் சீன தொழில் மற்றும் வர்த்தக வங்கியில் அனில் அம்பானியின் நிறுவனங்கள் 2012ம் ஆண்டு வாங்கிய கடன் திரும்ப செலுத்தப்படவில்லை.

இது குறித்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடன் தொகைக்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கும் பொறுப்பு உள்ளது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

எனவே, சீன வங்கிகளிடம் இருந்து பெற்ற 5,400 கோடியை 21 நாட்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதே சமயம், இந்த கடன் தொகைக்கு அனில் அம்பானி கையெழுத்திடவில்லை என்றும், இது தொடர்பாக சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனில் அம்பானியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com