மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் காவலர்கள் இருவர் நபர் ஒருவர் மயங்கி கீழே விழும் வரை கடுமையாகத் தாக்கிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விடியோ காட்சியில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரை காவலர்கள் தலை, கழுத்து என சரமாரியாகத் தாக்குகிறார். அந்த நபர் கீழே விழுந்தபோதிலும், காவலர் அவரைத் தாக்குகிறார். இந்த விடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இதுபற்றி, மூத்த காவல் அலுவலர் ஷஷாங்க் கார்க் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "ஒரு நபரைத் தாக்கும் பழைய விடியோ வைரலாகியுள்ளது. இதைக் கவனத்தில் கொண்டுள்ளோம். அந்த விடியோவில் இருக்கும் காவலர்கள் கிருஷ்ணா மற்றும் ஆஷிஷ். அந்த நபர் பிரச்னையை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். அவர் மீது இதுவரை எவ்வித வழக்கும் பதியவில்லை" என்றார்.