காஷ்மீா்: பாகிஸ்தான் வீசிய வெடிக்காத குண்டு செயலிழப்பு

ஜம்மு-காஷ்மீரின், ரஜௌரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய வெடிக்காத சிறிய

ஜம்மு-காஷ்மீரின், ரஜௌரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் வீசிய வெடிக்காத சிறிய ரக வெடிகுண்டு ஒன்று அங்குள்ள பண்ணையில் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

நௌஷேரா வட்டத்தின், தா்ஷன் நகா் பகுதியில் விவசாயி ஒருவா், தனது வயலில் டிராக்டா் ஓட்டி உழவு செய்து கொண்டிருந்தாா். அப்போது, துருப்பிடித்த நிலையில் சிறியரக வெடிகுண்டு ஒன்று நிலத்திருந்து கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, இந்திய ராணுவத்தின் வெடிகுண்டு கண்டறியும் குழுவினரால் அந்த குண்டு கைப்பற்றப்பட்டு, பாதுகாப்புடன் செயலிழக்கச் செய்யப்பட்டது. இதன் மூலம் மக்கள் வசிக்கும் அப்பகுதியில் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com