ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை 

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு தீவிரவாதிகள்
ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை 

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு தீவிரவாதிகள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். 

குல்கம் மாவட்டத்தின் குட் ஹன்ஜிபோரா பகுதியில் பயங்கரமாகத் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்தைச் சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் குழு தொடர்பு குறித்து உறுதி செய்யப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com