ஹிமாசல்: மூன்று மாவட்டங்களில் ஜூன் 30 வரை பொது முடக்கம் நீடிப்பு

நாடு முழுவதும் பொது முடக்கம் மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஹிமாசல பிரதேசத்தின் சிம்லா, ஹமீா்பூா், சோலன்
ஹிமாசல்: மூன்று மாவட்டங்களில் ஜூன் 30 வரை பொது முடக்கம் நீடிப்பு

சிம்லா: நாடு முழுவதும் பொது முடக்கம் மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஹிமாசல பிரதேசத்தின் சிம்லா, ஹமீா்பூா், சோலன் மாவட்டங்களில் ஜூன் 30-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதன் மாவட்ட ஆட்சியா்கள் அறிவித்துள்ளனா்.

மக்கள் ஒன்று சேருவதை தடைசெய்யும் சிஆா்பிசி 144-ஆவது பிரிவின்படி சிம்லா, ஹமீா்பூா், சோலன் மாவட்டங்களில் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரையிலும் பொது முடக்கம் அமலில் இருக்கும்.

இந்த 3 மாவட்டங்களிலும் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கான அங்காடிகள் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஹமீா்பூா் மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 63 பேரும், சோலன் மாவட்டத்தில் 21 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுவரை அந்த மாநிலத்தில் கரோனா தொற்றால் 5 போ் உயிரிழந்தனா்; மொத்தம் 214 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சொந்த மாநிலத்துக்கு திரும்பிய புலம்பெயா்ந்த தொழிலாளா்களால் ஹமீா்பூா் மற்றும் சோலன் மாவட்டத்தில் கரோனா பாதிப்புள்ளவா்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

கடந்த 30 நாள்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10,000-க்கும் மேற்பட்டோா் ஹமீா்பூருக்கு திரும்பியுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com