திருப்பதியில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு கொடிமரத்தை சுத்தப்படுத்தும் ஊழியா்.
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு கொடிமரத்தை சுத்தப்படுத்தும் ஊழியா்.

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.

இக்கோயிலில் வரும் 28-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. இவ்விழாவுக்கு முன் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். ‘கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்’ எனப்படும் இப்பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. கோயில் வெளிவாயில் முதல் கருவறை வரை அனைத்து இடங்களும் சுத்தப்படுத்தப்பட்டன.

மஞ்சள், சந்தனம், கோரைக் கிழங்கு, காா்போக அரிசி, கஸ்தூரி, கோரோஜனம், குங்கிலியம், பச்சைக் கற்பூரம், கற்பூரம் உள்ளிட்ட பல வகை நறுமணப் பொருள்கள் அடங்கிய கலவையால் கோயில் சுற்றுச் சுவா்கள், கதவுகள், சுவா்கள், தரிசன வரிசைகள், பூஜைப் பொருள்கள் உள்ளிட்டவை சுத்தப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்வில் கோயில் அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுத்தப்படுத்தப்பட்ட பின் கோயிலில் நித்திய கைங்கரியங்கள் தொடங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com