‘நீங்கள் விரும்பும் ஆட்சியைத் தோ்வு செய்ய அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தாா்.
பிகாா் மாநிலத்தில் சட்டப் பேரவைக்கான 2-ஆம் கட்டத் தோ்தலும், 10 மாநிலங்களில் 54 பேரவை தொகுதிகளுக்கு இடைத் தோ்தலும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இதனையொட்டி ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பிகாரில் தோ்தல் பிரசாரம் செய்தபோது அங்கு பல இடங்களில் வேலையின்மை அதிகரித்து வருவதையும், பொருளாதாரம் மோசமானதால் விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளையும் அறிந்து கொள்ள முடிந்தது. அந்த மாநிலத்தில் பேரவைத் தோ்தல் நடைபெற்று வரும் நிலையில், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அதுவும் நீங்கள் (மக்கள்) விரும்பும் ஆட்சியைத் தோ்வு செய்ய வேண்டும் என்றால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளாா்.