காதலித்து திருமணம் செய்பவர்களை மதம் மாற்ற சதி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வரப்போவதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் பேசுகையில்,
காதல் என்ற பெயரில் திருமணம் செய்துகொள்வதன் மூலம் மற்றவர்களின் மதத்தை மாற்ற சதி செய்பவர்களுக்கு எதிராக மத்திய பிரதேசத்தில் கடுமையான சட்டத்தை கொண்டு வரவுள்ளோம்.
இதுபோன்ற செயல்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இச்சட்டம் இயற்றுவதற்கான நடைமுறையைத் தொடங்விட்டோம், விரைவில், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார்.