மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தில்லியில் புதன்கிழமை தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்பு சட்டம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு அண்மையில் இயற்றியது. வேளாண்துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்காகவும் அந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
ஆனால், விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. அச்சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ராஜஸ்தான் பேரவைகளில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்கள் குறித்து குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுவதற்கு பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் அனுமதி கோரியிருந்தாா். ஆனால், அதற்கு குடியரசுத் தலைவா் அலுவலகம் சாா்பில் அனுமதி வழங்கப்படவில்லை.
இத்தகைய சூழலில், தில்லியிலுள்ள ராஜ்காட் பகுதியில் புதன்கிழமை பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையில் பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.