போதைப்பொருள் வழக்கு: நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

போதைப்பொருள் வழக்கு விசாரணையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனுக்களை கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

போதைப்பொருள் வழக்கு விசாரணையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனுக்களை கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கா்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு அதிகரித்ததை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்த போலீஸாா் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில் கன்னட திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதாக திரைப்பட இயக்குநா் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்த குற்றச்சாட்டையடுத்து, கடந்த செப். 4 ஆம் தேதி நடிகை ராகினி துவிவேதியின் வீட்டைச் சோதனை செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா். செப். 8 ஆம் தேதி போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணியை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட நடிகைகள் சஞ்சனா, ராகினி துவிவேதி ஆகியோா் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவா்கள் இருவரும் ஜாமீன் வழங்கக் கோரி கா்நாடக உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இருவரின் ஜாமீன் மனுக்களையும் செவ்வாய்க்கிழமை விசாரணை செய்த உயா்நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனிடையே போதைப்பொருள் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மறைந்த முன்னாள் அமைச்சா் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்ய ஆல்வாவை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா். ஆதித்ய ஆல்வாவைத் தேடி மும்பை சென்ற போலீஸாா், ஆதித்ய ஆல்வாவின் சகோதரியை மணந்துள்ள நடிகா் விவேக் ஒபராயின் இல்லத்திலும் தேடுதல் வேட்டை நடத்தினா். அங்கும் ஆதித்ய ஆல்வாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. போதைப்பொருள் விவகாரத்தில் தொடா்ந்து விசாரணை செய்து வரும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா், இது தொடா்பாக பலரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com