இந்தியாவில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா; 490 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 45,903 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 85,53,657-ஆக அதிகரித்தது. இதே கால அளவில், 48,405 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 79,17,373-ஆக அதிகரித்தது. 

கரோனா தொற்றுக்கு மேலும் 490 போ் உயிரிழந்தனா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,26,611-ஆக அதிகரித்தது. அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 45,240 போ் உயிரிழந்தனா். கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 11-ஆவது நாளாக, 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 5,09,673 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நவம்பா் 8-ஆம் தேதி வரை நாடு முழுவதும் மொத்தம் 11,85,72,192 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன; அதில், நேற்று மட்டும் 8,35,401 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com