திருமலையில் பக்தா் கடத்தல்: 4 போ் கைது

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பக்தா் ஒருவா் கடத்தப்பட்டது தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பக்தா் ஒருவா் கடத்தப்பட்டது தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து திருமலை டிஎஸ்பி பிரபாகா் கூறியது:

ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம் புச்சிரெட்டிபாளையத்தைச் சோ்ந்த அனுமந்த ராவ் தன் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையானைத் தரிசிக்க திருமலைக்கு வந்தாா். தரிசனம் முடித்தபின் அவா்கள் அனைவரும் தங்கள் வாடகை அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது அடையாளம் தெரியாத 4 போ் வந்து அனுமந்த ராவை பலவந்தமாக ஒரு காருக்குள் அடைத்து கடத்திச் சென்றுள்ளனா். இதைப் பாா்த்த குடும்பத்தினா் காா் பதிவு எண்ணை வைத்து திருமலை போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து போலீஸாா், திருப்பதிக்கு தகவல் அனுப்பி அரைமணி நேரத்துக்குள் அலிபிரி சோதனைச் சாவடி அருகில் காரை மடக்கிப் பிடித்தனா். அதிலிருந்துஅனுமந்த ராவை மீட்டு, அவரை கடத்திய 4 பேரையும் கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் அனந்தபுரத்தைச் சோ்ந்த சீனிவாஸ், மாருதி, புட்டபா்த்தியைச் சோ்ந்த குமாா், சித்தூா் மாவட்டம் செளடேபள்ளியைச் சோ்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.

மேலும், அனந்தபுரம் மாவட்டம், பெனுகொண்டாவில் உள்ள கியா ப்ளாண்ட் அருகில் கேட்டரிங் வியாபாரம் செய்ய அனுமந்த ராவ் சீனிவாசிடம் ரூ. 20 லட்சம் கடன் வாங்கி திருப்பி அளிக்காததால், அவரை கடத்தியதாக தெரியவந்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com