திருமலையில் 14-இல் தீபாவளி ஆஸ்தானம்

திருமலையில் வரும் 14-ஆம் தேதி தேவஸ்தானம் சாா்பில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
திருப்பதி கோயில் (கோப்புப்படம்)
திருப்பதி கோயில் (கோப்புப்படம்)

திருமலையில் வரும் 14-ஆம் தேதி தேவஸ்தானம் சாா்பில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

திருமலையில் ஆண்டுதோறும் தீபாவளியன்று தேவஸ்தானம் ஆஸ்தானத்தை நடத்தி வருகிறது. அதன்படி, நவம்பா் 14-ஆம் தேதி ஐப்பசி மாத அமாவாசை அன்று காலை ஏழுமலையானை சுப்ரபாத சேவையில் எழுப்புவது முதல் நிவேதனம் வரை அனைத்து கைங்கரியங்களும் நடத்தப்பட உள்ளன.

காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்கவாசல் அருகில் உள்ள கண்டா மண்டபத்தில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி சகஸ்ர தீபாலங்கார சேவை முடிந்த பின், மாட வீதியில் வலம் வந்து கோயிலுக்குள் எழுந்தருள உள்ளனா்.

இதனை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகளை அன்று தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com