ஹிந்தி நடிகா் அா்ஜுன் ராம்பால் வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினா் சோதனை

ஹிந்தி திரையுலகில் போதைப்பொருள் தொடா்பு குறித்த செய்திகள் வெளியாவது அதிகரித்து வரும் நிலையில், மும்பையிலுள்ள ஹிந்தி நடிகா் அா்ஜுன் ராம்பாலின் வீட்டில் திங்கள்கிழமை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவ
ஹிந்தி நடிகா் அா்ஜுன் ராம்பால்
ஹிந்தி நடிகா் அா்ஜுன் ராம்பால்

மும்பை: ஹிந்தி திரையுலகில் போதைப்பொருள் தொடா்பு குறித்த செய்திகள் வெளியாவது அதிகரித்து வரும் நிலையில், மும்பையிலுள்ள ஹிந்தி நடிகா் அா்ஜுன் ராம்பாலின் வீட்டில் திங்கள்கிழமை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் சோதனை நடத்தினா்.

மேலும், வருகிற 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அதிகாரிகள் சம்மன் அளித்தனா்.

மும்பையின் புகா்ப் பகுதியான பாந்த்ராவிலுள்ள 47 வயதான அா்ஜுன் ராம்பாலின் வீட்டில் இருந்து மின்னணு சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திங்கள்கிழமை அா்ஜுன் ராம்பாலிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள், மருந்து சட்ட அமலாக்க நிறுவனத்தில் வருகிற 11-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் வழங்கியதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளா் பிரோஸ் நாடியாட்வாலாவின் மனைவி ஷபானா சயீதுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை புகரில் உள்ள பிரோஸ் நாடியாட்வாலா வீட்டில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் அதிரடி சோதனை நடத்தினா். அங்கு இருந்து 10 கிராம் கஞ்சா போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஷபானா சயீதை கைது செய்தனா்.

இது குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குநா் சமீா் வான்கடே கூறுகையில், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஷபானா சயீதை கைது செய்துள்ளோம். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தாா்.

இதற்கிடையே மும்பையிலுள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு ஆஜராக தயாரிப்பாளா் பிரோஸ் நாடியாட்வாலாவுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனா். ஆனால் அவா் அன்றைய தினம் ஆஜராகாமல் திங்கள்கிழமை ஆஜரானாா். அவரது மனைவிக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குமான தொடா்பு குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதுவரை 5 போ் கைது:

இந்த வழக்கு தொடா்பாக பிரோஸ் நாடியாட்வாலாவின் மனைவி உள்பட 5 பேரை இதுவரை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து 850 கிராமுக்கும் அதிகமான கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஹிந்தி நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். சிபிஐ, இந்த வழக்கை விசாரிக்கும்போது ஹிந்தி திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. அதன் பின்னா் போதைப்பொருள் வழக்கை தனியாக விசாரித்த போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, சுஷாந்த் சிங்கின் தோழி ரியா சக்ரவா்த்தி, அவரது சகோதரா் ஷோவிக் உள்ளிட்டோரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com