ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷாஹ்பூர், கிர்னி மற்றும் கஸ்பா ஆகிய பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.