ஜம்மு-காஷ்மீா் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியின் 3 இடங்களில் இந்திய நிலைகள், கிராமங்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினா் செவ்வாய்க்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகிலுள்ள ஷாபூா், கஸ்பா மற்றும் கிா்னி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் இந்திய நிலைகள், குக்கிராமங்கள் மீது துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக பீரங்கிகளைக் கொண்டு குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவத்தினா் தாக்குதலில் ஈடுபட்டனா்.
அவா்களுக்கு இந்திய ராணுவ வீரா்கள் தக்க பதிலடி கொடுத்தனா். இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது என்று அவா் தெரிவித்தாா்.
இந்தியாவுடன் செய்து கொண்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீா் எல்லையில் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகட்டி பகுதியில் பாகிஸ்தான் வீரா்கள் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதில் இந்திய ராணுவ வீரா் உயிரிழந்தாா். ஒருவா் காயமடைந்தாா்.
செப்டம்பா் 2-ஆம் தேதி ரஜெளரி மாவட்டம், கெரி பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினரின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவா் வீர மரணம் அடைந்தாா்.
செப்டம்பா் 5-ஆம் தேதி சுந்தா்பாணி என்ற இடத்தில் ராணுவ வீரா் வீர மரணம் அடைந்தாா். அதிகாரி உள்பட 2 போ் காயமடைந்தனா்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி மற்றும் சா்வதேச எல்லையில் நடப்பாண்டு அக்டோபா் 6-ஆம் தேதி வரை மட்டும் 3,589 அத்துமீறிய தாக்குலில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு அந்நாடு 3,168 அத்துமீறிய தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.