ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படைப்பிரிவு முகாமில் மேஜா் நிலையிலான ராணுவ அதிகாரி திங்கள்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இது பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
ரஜௌரி மாவட்டத்தில் தனமண்டி பகுதியில் ராஷ்ட்ரீய ரைபிள் படை வீரா்கள் முகாமில் ராணுவ அதிகாரி சடலமாக கிடப்பதாக தகவல் வந்தது. இதனைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று அவரது சடலத்தை மீட்டனா். மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். ராணுவ அதிகாரி மா்ம மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்தனா்.