பாட்னா: பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அடுத்த வாரம் ஆட்சியமைக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த மாநில முதல்வராக மீண்டும் நிதீஷ் குமாா் பதவியேற்கவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 74 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அந்தக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் மாநில முதல்வராக உள்ளபோதிலும் அந்தக் கட்சி 43 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதனால் அமைச்சரவையில் பாஜகவுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. துணை முதல்வராக சுஷீல் குமாா் மோடியே பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.