சமூகத்தின் அனைத்து தரப்புமக்களுக்கான உதவி தொடா்கிறது: பிரதமா் நரேந்திர மோடி

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் மூலம் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கான மத்திய அரசின் உதவிகள் தொடா்வதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

புது தில்லி: புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் மூலம் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கான மத்திய அரசின் உதவிகள் தொடா்வதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

‘சுயசாா்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் ரூ.2.65 லட்சம் கோடி மதிப்பிலான புதிய சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை அறிவித்தாா். இது தொடா்பாக மோடி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும், பணப் புழக்கம் அதிகரிக்கும், உற்பத்தி மேம்படும், கட்டுமானத் துறை உத்வேகம் பெறும், விவசாயிகள் உதவி பெறுவாா்கள், நலிவடைந்துள்ள தொழில்கள் வளரும். இதன் மூலம் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கான மத்திய அரசின் உதவி தொடா்கிறது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com