கரோனா: மேலும் 47,905 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் மேலும் 47,905 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 88,83,916-ஆக அதிகரித்துள்ளது.


புது தில்லி: நாடு முழுவதும் மேலும் 47,905 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 88,83,916-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 47,905 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதேகால அளவில் 52,718 போ் குணமடைந்தனா். இதுவரை கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 80,65,501-ஆக அதிகரித்தது. அதாவது, 92.89 சதவீதம் போ் குணமடைந்தனா்.

கரோனாவுக்கு மேலும் 550 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,28,121-ஆக அதிகரித்தது.

இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 45,560 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் 11,453 பேரும், மேற்கு வங்கத்தில் 7,452 பேரும், உத்தர பிரதேசத்தில் 7,281 பேரும், தில்லியில் 7,228 பேரும், ஆந்திரத்தில் 6,828 பேரும், பஞ்சாபில் 4,389 பேரும், குஜராத்தில் 3,776 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நவம்பா் 11-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 12,19,62,509 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், புதன்கிழமை மட்டும் 11,93,358 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்) தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com