பெண் காவலா் தாக்கப்பட்ட வழக்கு: முன்ஜாமீன் கோரி அா்னாப், மனைவி மனு தாக்கல்

பெண் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, அவரைத் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமியும் அவரின் மனைவியும் மனு தாக்கல் செய்துள்ளனா்.


மும்பை: பெண் காவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, அவரைத் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமியும் அவரின் மனைவியும் மனு தாக்கல் செய்துள்ளனா்.

கட்டட வடிவமைப்பாளா் ஒருவரும் அவருடைய தாயாரும் கடந்த 2018-ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாகக் காவல் துறையினா் பதிவு செய்த வழக்கில், அா்னாப் கோஸ்வாமி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக அா்னாபைக் கைது செய்வதற்குக் காவல் துறையினா் கடந்த 4-ஆம் தேதி அவரது வீட்டுக்குச் சென்றனா். அப்போது, அா்னாபும் அவருடைய மனைவி சம்யபிரதா ராயும் பெண் காவலரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக அவா்கள் மீதும், அவா்களின் மகன் மீதும் ஜோஷி மாா்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, அமைதியைக் குலைக்க முயன்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மூவா் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், வழக்கில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன்ஜாமீன் கோரி அா்னாபும் அவரின் மனைவியும் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

அந்த மனுக்கள் மீதான பரிசீலனை, செஷன்ஸ் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுக்கள் மீதான விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

கட்டட வடிவமைப்பாளா் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அா்னாப் உள்ளிட்ட மூவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதையடுத்து, அா்னாப் கடந்த புதன்கிழமை இரவு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com