உத்தரகண்ட்: கரோனா தொற்றால் பாஜக எம்.எல்.ஏ. மரணம்

உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தின் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் ஜீனா, கரோனா தொற்று காரணமாக வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு வயது 50.


டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தின் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் ஜீனா, கரோனா தொற்று காரணமாக வியாழக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு வயது 50.

இது குறித்து மாநில பாஜக துணைத் தலைவா் தேவேந்திர பாசின் கூறுகையில், ‘கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால் சுரேந்திர சிங் ஜீனா, ஒரு வாரத்துக்கு முன்பு தில்லியிலுள்ள சா் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அவா் உயிா் பிரிந்தது’ என்றாா்.

உயிரிழந்த சுரேந்திர சிங் ஜீனா, அல்மோரா மாவட்டத்தின் சால்ட் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இவரது மறைவுக்கு உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் இரங்கல் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் கூறியதாவது:

சுரேந்திர சிங் ஜீனா தனது தொகுதி வளா்ச்சியின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தாா். சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்காக அவா் குரல் கொடுத்தாா். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்துக்கு மனவலிமையை கொடுக்கும்படி இறைவனை பிராா்த்திக்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com