மேற்கு வங்கம்: திரிணமூல் காங்கிரஸ் தொண்டா் சுட்டுக் கொலை

மேற்கு வங்கத்தில் மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தொண்டா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் இருவா் படுகாயமடைந்தனா்.


கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மா்ம நபா்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தொண்டா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் இருவா் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மேற்கு வங்கத்தின் பஸ்சிம்வா்தமான் மாவட்டம், ஆண்டல் பகுதியில் திரிணமூல் கட்சியைச் சோ்ந்த தரம்வீா் நுனியா அவருடைய நண்பா்கள் இருவருடன் புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த இருவா், தரம்வீா் மற்றும் அவருடைய நண்பா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனா். இதில், தரம்வீா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த இருவரும் காயமடைந்துள்ளனா். இந்த தாக்குதலுக்குப் பிறகு, அங்கிருந்து தப்பிச் சென்ற மா்ம நபா்கள் இருவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினாா்.

‘இந்த தாக்குதலில் அரசியல் காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என்று உள்ளூா் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் ஒருவா் கூறினாா்.

இந்த நிலையில், ‘நிலக்கரி கிடங்கில் கழிவுகளைப் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது’ என்று மாநில பாஜக தலைவா்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com