இந்தியா
பிகாரில் நாளை அமைச்சரவைக் கூட்டம்
பிகாரில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.
பிகாரில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.
ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 7-வது முறையாக இன்று பிகார் முதல்வராகப் பதவியேற்றார். நிதிஷ் குமாருடன் 14 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவும் இன்று பதவியேற்றது. பாஜகவைச் சேர்ந்த தாரிகிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாப் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 23-ம் தேதி சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடுகிறது.
துணை முதல்வர்கள் பொறுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.