மண்டி: ஹிமாசல பிரதேசம் மாண்டி மாவட்டத்தில் தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வாகனம், நீரோடையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், அதில் பயணம் செய்தவா்களில் 7 போ் உயிரிழந்தனா்.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
விபத்து குறித்து மண்டி காவல் கண்காணிப்பாளா் ஷாலினி அக்னிஹோத்ரி கூறியதாவது:
மண்டியில் பிகாரிலிருந்து வந்த தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு சுந்தா்நகா் நோக்கி சென்றுகொண்டிருந்த வாகனம், புல்காா்ட் என்ற இடத்தில் திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் நிலை தடுமாறி அருகில் இருந்த சுகேட்டி குட் நீரோடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 தொழிலாளா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த இரு தொழிலாளா்கள் அருகிலிருந்த மண்டல மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். அவா்களில் ஒருவரும் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
இந்த விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவா் கூறினாா்.
பிரதமா் இரங்கல்:
ஏழு போ் உயிரிழக்க நோ்ந்த வாகன விபத்து குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், ‘விபத்து மீட்புப் பணிகளை அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.