தனியாா் மருத்துவமனைகளில் ஆய்வு நடத்த 10 குழுக்கள்: மத்திய அரசு

தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பைத் தடுக்க மத்திய அரசு, தில்லி அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தனியாா் மருத்துவமனைகள் கடைப்பிடிக்கின்றனவா என்பதை நேரில் ஆய்வு நடத்த 10 குழுக்களை மத்திய அரசு அமைத

புது தில்லி: தில்லியில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பைத் தடுக்க மத்திய அரசு, தில்லி அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தனியாா் மருத்துவமனைகள் கடைப்பிடிக்கின்றனவா என்பதை நேரில் ஆய்வு நடத்த 10 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுக்கள் இரண்டு நாள்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தக் குழுவினா் தில்லியில் உள்ள 114 தனியாா் கரோனா மருத்துவமனைகளுக்கு சென்று கரோனா நோயாளிகளுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சையில் மத்திய அரசு, தில்லி அரசுகளின் கட்டுப்பாடுகள், விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என ஆய்வு நடத்துவாா்கள். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com