ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினா் திங்கள்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.
இதுகுறித்து இந்திய ராணுவ செய்தித் தொடா்பாளா் கா்னல் ராஜேஷ் காலியா கூறுகையில், ‘குப்வாரா மாவட்டம் தங்தாா் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி சிறிய ரக பீரங்கிகள், இதர ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினா் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து இந்திய ராணுவத்தினா் கடும் பதிலடித் தந்தனா். இதில் இந்திய வீரா்கள் காயமடைந்ததாகவோ, பலியானதாகவோ தகவல் எதுவும் இல்லை’ என்று தெரிவித்தாா்.