இந்தியா
பாதுகாப்பு படைகள் மீது கையெறி குண்டுவீச்சு: பொதுமக்கள் இருவர் காயம்
ஜம்மு காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படைகள் மீது வீசப்பட்ட கையெறி குண்டுவீச்சு இலக்குத் தவறி பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படைகள் மீது வீசப்பட்ட கையெறி குண்டுவீச்சு இலக்குத் தவறி பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் உள்ள கக்போரா பகுதியில் காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் புதனன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் எதிர்பாராவிதமாக அவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசினர். ஆனால் குறிதவறி அது சாலையில் வெடித்தது.
இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் பாதுகாப்பிற்காக கூடுதல் படைகள் தற்போது குவிக்கப்பட்டுள்ளன.